Sunday, June 19, 2011

மனுஷ்யபுத்திரனுக்கு கனடா நாட்டின் விருது.



எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் அதீதத்தின் ருசி கவிதைத் தொகுப்புக்கு, கனடா நாட்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது.

உயிர்மை பத்திரிகை ஆசிரியர், கவிஞர், இலக்கியவாதி என பன்முக முகங்களை கொண்டவர் மனுஷ்ய புத்திரன். இவர் 20 ஆண்டுகளாக இலக்கியப் பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றார்.

இவரது அதீதத்தின் ருசி என்ற கவிதைத் தொகுப்பின் சில பகுதிகள், ஈழப்போர் படுகொலை கோரங்களை நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதில், எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரை தொகுப்புகளை மனுஷ்ய புத்திரன் வெளியிட்டுள்ளார்.

மிகச் சிறந்த கவிதைத் தொகுப்புகளுக்கே, கனடா நாட்டின் தமிழ் இலக்கியத் தோட்ட விருது கிடைக்கிறது. அந்த வகையில், சர்வதேச அங்கீகாரம் மனுஷ்ய புத்திரனுக்கு கிடைத்துள்ளது. இந்த விருதுடன், ரொக்கப் பரிசு 23 ஆயிரம் ரூபாயும் அவருக்கு வழங்கப்பட உள்ளது.

No comments: