Sunday, May 8, 2011

பல் மருத்துவ படிப்பில் புகையிலை ஒழிப்பு.

பல் மருத்துவ பாடத் திட்டத்தில், "புகையிலை கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு" என்ற அம்சத்தை சேர்ப்பது பற்றி ஆரம்ப அளவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எல்லாம் திட்டப்படி நடந்தால், இந்த முயற்சி வெற்றிபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயல்திட்டத்தை இந்திய டென்டல் கவுன்சில் கடைசியாக நடந்த தனது கூட்டத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது. அதேசமயம் இறுதி முடிவானது மத்திய சுகாதார அமைச்சகத்தால் மட்டுமே எடுக்கப்பட முடியும்.

ஏனெனில் பல் மருத்துவர்கள்தான் நோயாளிகளின் வாய் புற்றுநோய் அறிகுறிகளை அறிவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். எனவே பல் மருத்துவ பாடத்திட்டத்தில் புகையிலை கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பை சேர்ப்பது முக்கியமானதாக ஆகிறது. ஆனால் தற்போது இருக்கும் பல் மருத்துவ பாடத்திட்டத்தில் புகையிலை ஒழிப்பு தொடர்பாக போதிய அம்சங்கள் இல்லை.

இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் புகையிலை பயன்படுத்துகிறார்கள். அவர்களில் 26% பேர் புகைப்பிடிக்காத மற்ற வழிகளில் புகையிலை பயன்படுத்துகிறார்கள். உலகிலேயே வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில்(80% முதல் 90% வரை) இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மைகளை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் புகையிலை கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு அம்சத்தினை எம்.பி.பி.எஸ். பாடத்திட்டத்திலும் சேர்ப்பது பற்றி எம்.சி.ஐ. ஆலோசித்து வருகிறது. மேலும் அதை பார்மகாலஜி, கம்யூனிட்டி மெடிசின், சைக்கியாட்ரி, சர்ஜெரி, பேதோலஜி மற்றும் பயோகெமிஸ்டிரி போன்ற படிப்புகளிலும் அறிமுகப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

No comments: