Saturday, April 2, 2011

அழகிரி மீது பொய்வழக்கு மாவட்டஆட்சியர் சகாயம் நிர்பந்தம் தேர்தல் அதிகாரி புகார் .

மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு எதிராக பொய் வழக்கு போட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் கெடுபிடி செய்து வருவதாகவும், தொடர்ந்து தன்னை நிர்பந்திப்பதாகவும், மதுரை மாவட்ட கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியான வருவாய் கோட்டாட்சியர் சுகுமார் தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண்குமாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் மூர்த்தி மீதும் பொய் வழக்கு போட தொடர்ந்து மதுரை மாவட்டஆட்சித் தலைவர் சகாயம் நிர்பந்திக்கிறார். என்றும் மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயத்தின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தவும், அவரின் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளுக்கு, முற்றுபுள்ளி வைக்கவேண்டும் என்று தலைமைச் செயலாளர்க்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.

No comments: