Saturday, April 2, 2011

மும்பையில் நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் கைது.

மும்பையில் இந்தியா, இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண வந்திருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவி்த்து அவரது உருவப் படத்தை எரி்த்த நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியைக் காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். இன்று திருப்பதியில் இருந்து அவர் மும்பை செல்கிறார்.

இந்த நிலையில் 500 இந்திய, தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள இனவெறியன் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மும்பை நாம் தமிழர் கட்சியினர் இன்று பெரிய அளவிளான போராட்டத்தை நடத்த தயாராகி வந்தனர். அதற்கு முன்பாக மும்பை தாராவி பகுதியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவப்படத்தை எரித்தனர்.

இதனால் மும்பை நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் ராசேந்திரன், சேலம் செல்லதுரை மற்றும் விழித்தெழு இயக்கத்தைச் சேர்ந்த சிரிதர் ஆகியோர் இன்று அதிகாலை 2.00 மணியளவில் கைது செயப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போர்குற்றவாளி ராஜபக்சேவை அணைத்து வழிகளிலும் தொடர்ந்து காப்பாற்றி வரும் இந்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கையே இந்த கைது நடவடிக்கை என்று கருதப்படுகிறது. மராட்டிய மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: