Tuesday, April 12, 2011

ஜப்பான் அணு கதிர்வீச்சு அபாய கட்டத்தை எட்டியது; பொதுமக்கள் பீதி.

ஜப்பான் அணு கதிர்வீச்சு   அபாய கட்டத்தை எட்டியது;   பொதுமக்கள் பீதி

ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி பூகம்பமும் சுனாமியும் ஏற்பட்டது. இதில் சுமார் 28 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்தில் அணு உலைகள் வெடித்தன. அதில் இருந்து அணு கதிர்வீச்சு வெளியேறியது. இதை தொடர்ந்து அப்பகுதியில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையே, வெடித்து சிதறிய அணு உலைகளை குளிர்வித்து கதிர்வீச்சு பரவுவதை கட்டுப்படுத்தும் பணியில் நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் கதிர் வீச்சு பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.வெடித்த அணு உலைகளில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகி வருகிறது.

இந்நிலையில், கதிர் வீச்சு அபாய அளவை எட்டி உள்ளது. அணு உலைகளில் பாதிப்பு ஏற்படும்போது கதிர் வீச்சின் அளவு 7 என்ற அளவு வரை இருக்கலாம் என உலக நாடுகள் வரையறுத்துள்ளன. தற்போது, வெடித்து சிதறி பிரச்சினைக்குள்ளான ஜப்பானின், புகுஷிமா அணு உலையில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவு நேற்று 7 ஆக உயர்ந்தது.

இது அபாயகரமான அளவாக கருதப்படுகிறது. இதனால் புகுஷிமா பகுதியில் வாழும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் வீடுகளை விட்டு வெளியே வராமல் கதவை பூட்டியபடி உள்ளேயே தங்கி உள்ளனர்.

கதிர்வீச்சு அபாய கட டத்தை எட்டியுள்ளதால் அங்கிருந்து மக்கள் வெளியேறும்படி ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு சோவியத் ரஷியாவில் ஷெர்னோவில் அணு உலையில் விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சில் 29 பேர் பலியானார்கள். அந்த அளவுக்கு புகுஷிமாவில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படவில்லை.

இருந்தாலும் தற்போது அதன் அளவுக்கு புகுஷிமா அணு உலையால் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.


1 comment:

நிலாமதி said...

அணுக் கதி வீச்சு மெல்லக் கொல்லும் விஷம்....மேலும் தகவல் தாருங்கள்.