Tuesday, April 12, 2011

மாணவர்களுக்கு மொழி உணர்வு அழுத்தமாக இருக்க வேண்டும்; பாரதிராஜா பேச்சு.

மாணவர்களுக்கு மொழி உணர்வு அழுத்தமாக இருக்க வேண்டும்;    பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேச்சு

புதுவை மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

விழாவில், சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு, தேர்வில் ஒவ்வொரு துறையிலும் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த பேராசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ரொக்கப் பரிசும் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் போல் வேறு எந்த மாநிலத்திலும் கல்லூரிகள் கிடையாது.நாம் படிக்கிற காலத்தை விட எதிர்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.எனது தாயை தெய்வமாக வணங்குகிறேன். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் போல் வேறு எந்த மாநிலத்திலும் கல்லூரிகள் கிடையாது.நாம் படிக்கிற காலத்தை விட எதிர்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.எனது தாயை தெய்வமாக வணங்குகிறேன். உங்கள் முன் சிறந்த சினிமா இயக்குனராக நிற்கிறேன் என்றால் என்னை பள்ளி பருவத்தில் ஊக்குவித்த தமிழாசிரியரையே அந்த பெருமை சேரும்.

பெற்றோரை அடுத்து ஆசிரியர்கள்தான் உங்களின் எதிர்கால நிலையை கணிக்க முடியும். எனவே குறிக்கோளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். படிப்புடன் ஓவியம், எழுத்தாற்றல், கவிதை, உள்ளிட்ட கலைகளையும் வளர்த்துக் கொண்டு ஒன்றில் சரிந்தாலும் மற்றொன்றை இறுக பற்றி கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாணவர்களுக்கு மொழி, இனத்தின் உணர்வு அழுத்தமாக இருக்க வேண்டும். சமுதாயத்தை தூக்கி நிலை நிறுத்தும் மாணவர்கள்தான் பலம் வாய்ந்த சக்திகள். எதிர்கால சமுதாயம் உங்கள் கையில்தான் உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

No comments: