Thursday, April 14, 2011

வந்தார் வடிவேலு - வடிவேல் வெடிவேல்.


வந்தார் வடிவேலு - ரவிக்குமார். விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர்.

நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையிலிருந்து என்னிடம் கருத்து கேட்டார்கள். இந்தத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுத்தால் அதற்கு எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று கேட்டார்கள். ரஜினி இப்போது அரசியல் தளத்தில் காணாமல் போய்விட்டார். அவர் இரண்டாவது முறை வாய்ஸ் கொடுத்தபோதே அதற்கு மதிப்பில்லை.

இந்தத் தேர்தலைப் பொருத்தவரை வடிவேலுதான் ஸ்டார் . அவர் சரளமாக அரசியல் பேசுவது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.எனக்காகப் பிரச்சாரம் செய்ய பத்தாம் தேதி வடிவேலு வந்திருந்தார். குமராட்சி, லால்பேட்டை , காட்டுமன்னார்கோயில் ஆகிய இடங்களில் பேசினார். காட்டுமன்னார்கோயிலில் சுமார் பத்தாயிரம் பேர் திரண்டிருந்தனர். அங்கு அரை மணி நேரம் பேசினார்.

தி.மு.க அரசின் நலத் திட்டங்களை அவர் எடுத்துச் சொல்லும்போது அது எளிதாக மனதில் பதிகிறது.

விஜயகாந்த்தை சுக்கு நூறாக நொறுக்கியது வடிவேலுதான். காட்டுமன்னார்கோயிலிலும் அவருடைய பேச்சில் கொஞ்சம் விஜயகாந்த் குறித்த விமர்சனம் இருந்தது.

ரஜினியே வந்தால்கூட இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

இனிமேல் திரைப்பட நடிகர்கள் தமிழக அரசியலில் பெரிய அளவுக்கு பாதிப்பை எற்படுத்த முடியாது.

வடிவேலுவும்கூட தனியே ஒரு கட்சி ஆரம்பித்து பேச ஆரம்பித்தால் அவருக்கு இந்த அளவுக்கு ஆதரவு இருக்காது.



வடிவேல் வெடிவேல் - ஜாக்கிசேகர்.


வடிவேல் தனது அரசியில் கன்னி பேச்சை முதன் முதலில் திருவாரூரில் இருந்து ஆரம்பித்த போது, இந்த தேர்தலில் மிகப்பெரிய எழுச்சிக்கு வடிவேலு காரணமாக இருப்பார் என்று நண்பரோடு பேசிக்கொண்டு இருக்கையில் சொன்னேன்.

நண்பர் அதுக்கு டிவியை போட்டு ஆதித்யா சேனல் வைத்து பாருங்க.. நாள் புல்லா இந்த மூஞ்சியைதான் பார்த்துக்குனு இருக்காங்க.. ஒரே போர் என்று அங்கலாய்த்தார்... விஜயகாந்த் ஜெவிடமே 40 சீட்டு வாங்கிய ஒரு கட்சியின் தலைவர் அவரின் பேச்சைதான் மக்கள் உன்னிப்பாய் பார்ப்பார்கள்... வடிவேல் ஒரு காமேடி பீஸ் என்று சொன்னார்...

விஜயகாந்தை விட மக்கள் செல்வாக்கு வடிவேலுக்கு இருக்கின்றது.. மிக முக்கியமாக வடிவேலுவுக்கு கிராமபுறங்களில் நல்ல செல்வாக்கு இருக்கின்றது... அவர் சொன்னால் கேட்டு ஓட்டு போட ஒரு இரண்டு சதவிகிதமாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று சொன்னேன்... நண்பர் கடைசிவரை ஒத்துக்கொள்ளவே இல்லை....

கலைஞரை விட வடிவலுவின் பேச்சுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பால் கலைஞர் பேசுவதை குறைத்து வடிவேல் பேசுவதை இரண்டு டிவிக்களிலும் அதிகம் ஒளிபரப்பினார்கள்....

வடிவேல் விஜயகாந்தை திட்டிவிட்டு, கலைஞர் அரசின் திட்டங்களை மிக அழகாக மக்களிடம் விளக்கி கூறினார். அதுக்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ். அந்த ரெஸ்பான்ஸ், அந்த எழுச்சி மாவட்ட செயலர்கள் மூலம் கலைஞர் காதுக்கு வர திமுகவுக்கு ஒரு பெரிய பிரச்சார பிரங்கியாக வடிவேல் மாறிப்போனார்....

வடிவேல் இப்படி பேச்சில் பின்னி பெடல் எடுக்க, அதே பேச்சில் விஜயகாந்த் மிகவும் சொதப்பினார்... அதிமுக கொள்கைபரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கின்றார் என்று தப்பாக மாற்றி பேச, அப்படி தப்பாக மாற்றி பேச இங்கு சத்தம் போட்ட மக்கள்தான் காரணம்., என்று மக்களை சத்தம்போட.... அதையும் தனது பிரச்சாரத்தில் வடிவேல் விட்டு வைக்கவில்லை... ஒரு ஹீரோ மற்றும் கட்சித் தலைவரை ஒரு காமெடியன் வறுத்து எடுத்ததை தமிழகம் வேடிக்கை பார்த்தது...........

28வருஷத்துக்கு பிறகு போராடி கப்பு வாங்கினானே அவன்தான் கேப்டன் நீ இல்லை... என்பது போன்ற சரவெடிகளை தனக்கே உரிய பாணியில் நையான்டி செய்து கொண்டு அப்படியே கலைஞர் அரசின் நலதிட்டங்களை மக்களிடத்தில் சொல்லிக்கொண்டு போனது பெரிய பிரச்சார ஹைலைட்...

இரண்டு பேரும் ஒரே மேடையில் ஏறி பேச முடியுமா? கூட்டணி தானே? அந்தம்மா எதிர்க்க நான்தான் சின்ன எம்ஜியார் என்று மேடையில் சொல்ல முடியமா? என்று வடிவேல் சவால் விட, அதுக்கு எதிர்தரப்பில் இருந்து கடைசிவரை நோ ரெஸ்பானஸ்....

மக்கள் மிக உன்னிப்பாக அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்காங்க...நான் கேட்ட கேள்விக்கு எதிர் சைடில் இருந்து பதில் இல்லை... இந்த தேர்தலோடு பேக்கப் ஆயிட வேண்டியதுதான் என்று போகின்ற போக்கில் தனது பிரச்சாரத்தின் வாயிலாக பேசிக்கொண்டு சென்றார்...

களப்பணியாற்றுபவனுக்கே மக்கள் நாடி துடிப்பு தெரியும்... முதலில் ஸ்பெக்ட்ரம் பூதம் பார்த்து சுனக்கம் காட்டிய திமுக பெருந்தலைவர்கள் கூட பிரச்சாரம் நேற்று முடியும் போது நாங்களும் ஜெயிப்போம் என்று நம்பிக்கையுடன் சொன்னார்கள் அதுக்கு காரணம் வடிவேலுவின் பிரிச்சாரம் 5 பர்சென்டாவது இருக்கும் என்று நான் நம்புகின்றேன்....

முதலில் விஜயகாந்த் பக்கம் இருந்த படித்த மக்கள், ஒருவரை கை நீட்டி அடித்ததும், அவருக்கு இருந்த செல்வாக்கு சடசடவென குறைய ஆரம்பித்தது... அதை தனது பிரச்சாரத்தில் ஒரு அப்பாவியை போட்டு இப்படி அடிக்கலாமா? யார் பெத்த புள்ளையோ? என்று வடிவேல் சொல்லும் போது கூட்டம் உன்னிப்பாக கவனிக்கின்றது....

வடிவேலுவுக்கு எதிர்ப்பாய் ஒரு ஆள் இறக்கினார்கள். அவர் சிங்கமுத்து பெரிய அளவில் சோபித்தது போல எனக்கு தெரியிவில்லை.

சுட்டி சுட்டி உன் வாலைக்கொஞ்சம் சுருட்டிகொள்ளடி என்று வெட வெடவென ஒல்லியான தேகத்துடன் விஜயகாந்தின் சின்னக்கவுண்டர் படத்தில் ஆடிய வடிவேல், 2011 சட்டசபை தேர்தலில் திமுகவின் கொள்கை பரப்பு செயலர் ரேஞ்சிக்கு மாறியது காலத்தின் கட்டாயம்... அதை மிக லாவகமாக தன் பக்கம் திருப்பிக்கொண்டது திமுக...

எதிர்காலத்தில் அரசியலில் வடிவேலுவுக்கு ஒரு சீட் காத்துக்கொண்டு இருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை.. வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் எனும் பழமொழிக்கு மிகச்சரியான ஆள் வடிவேல்தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை....

No comments: