Wednesday, December 14, 2011

கேரளா செல்லும் பன்றிக்கு ரயில்வே எஸ்பி தினகரன் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு.



தேனி மாவட்டம் சின்னமனூரில் நேற்று இரவு கேரளாவுக்கு வெள்ளை பன்றிகள் ஏற்றிச் சென்ற லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் 2 பெண் போலீசார் படுகாயம் அடைந்தனர். போராட்டம் நடத்தியவர்களை இரவு முழுவதும் வீடு வீடாக கதவை தட்டி போலீசார் தேடினர். இதுதொடர்பாக 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன்பட்டியில் கேரள மாநிலத்தவர்களுக்கு சொந்தமான வெண்பன்றி பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகள் கேரளாவுக்கு அனுப்பப்படும். இப்பண்ணை கேரள மாநிலத்தவர்களுக்கு சொந்தமானது என தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்தனர். கிராம மக்கள் நேற்று பண்ணைக்குள் புகுந்து தாக்க திரண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே எஸ்பி தினகரன் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதையடுத்து பன்றிகளை லாரிகளில் ஏற்றி கேரளா கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பண்ணைக்குள் புகுந்த மக்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டினர்.

இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு பன்றிகளை 3 லாரிகளில் ஏற்றிக் கொண்டு சின்னமனூர், பொள்ளாச்சி வழியாக கேரளா கொண்டு செல்ல முயன்றனர். இதையறிந்ததும் சின்னமனூரில் பொதுமக்கள் மூன்று லாரிகளையும் சிறைபிடித்தனர்.

லாரிகளுக்கு பாதுகாப்பாக வந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதனால் போலீசார் மீண்டும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கல்வீச்சில் டிஐஜி அமல்ராஜின் கார் கண்ணாடி உடைந்தது. போலீசாரின் வேன்களும் சேதப்படுத்தப்பட்டன.

தடியடியில் முருகன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பன்றிகளை ஏற்றி வந்த லாரிகள் ஓடைப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டு பத்திரப்படுத்தப் பட்டன. இதனால் மேலும் ஆத்திரமடைந்த மக்கள் சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை கற்களை தூக்கி போட்டு உடைத்தனர்.

போலீசார் அங்கு வந்ததும் அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.

நேற்று கேரளவத்தவர்களால் வெட்டப்பட்டு உயிர்தப்பி ஓடிவந்த தமிழர்களின் பாதுகாப்பை விட, தமிழக காவல்துறைக்கு கேரளா செல்லும் பன்றியின் பாதுகாப்பு முக்கியமாகப்பட காரணம் அங்கு பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அனைவரும் வேறு மாநிலத்தவரே.

முல்லைப்பெரியாறு அணை விவகார போராட்டக் களத்தில் நிற்கும் முக்கிய அதிகாரிகளான, தேனி மாவட்ட எஸ்.பி. பிரவின்குமார் ஆந்திரக்காரர். திண்டுக்கள் சரக டி.ஐ.ஜி. சஞ்சய்மாத்தூர் ராஜஸ்தான்காரர். தென்மண்டல ஐ.ஜி. ராஜேஸ்தாஸ் ஒரிசாக்காரர். சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி. ஜார்ஜ் கேரளக்காரர். இவர்களுக்கெல்லாம் தமிழனின் தேவையும், உணர்வும் எங்கே புரியப்போகிறது?

No comments: