Wednesday, December 14, 2011

ஓட்டுனர்களை முந்தி மாமூலை அள்ளும் அரசு போக்குவரத்து கழகம்.



தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் ஏழு கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கோட்டங்களில் இருந்து ஒன்பது ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் அதிக தூரமுள்ள இடங்களுக்கு சென்று வருகின்றன.

இப்படி இயக்கப்படும் பேருந்துகள் விழுப்புரம், தின்டிவனம், கிருஷ்ணகிரி, தாராபுரம், அவினாசி, கொடைரோடு. வேடசந்தூர் போன்ற இடங்களில் உள்ள சில பயணவழி உணவகங்களில் நின்று செல்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொரு ஊரிலும் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள உணவகங்களில் பயணிகள் சென்று சாப்பிட்டுவிட்டு செல்ல அனுமதித்த ஓட்டுனர்கள், இந்த பயனவழி உணவகங்கள் துவங்கப்பட்ட பின்னர், பேருந்து நிலையங்களில் பேருந்தை நிறுத்தாமல், இந்த பயனவழி உணவகங்களிலேயே பேருந்துகளை நிறுத்துகிறார்கள்.

அதற்கு காரணம், அந்த உணவகங்களில் ஓட்டுனர், மற்றும் நடத்துனர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் சாப்பாடு, ஒரு தட்டு கோழிக்கறி, வெற்றிலை பாக்கு, ஒரு பாக்கெட் வில்ஸ் அல்லது கோல்டுபிளாக் சிகரெட் பாக்கெட் போன்றவைதான்.

ஆனால், பொதுமக்களை கொள்ளையடிக்கும் இந்த உணவகங்களில் சாதாரனமாக் கடைகளில் கிடைக்கும் சிகரெட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் என எல்லாவற்றிக்கும் அதான் விற்பனை விலையை விடவும் இரண்டு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை கூடுதலாக விற்கிறார்கள்.

இந்த உணவகங்களில் சாப்பிட போகும் பயணிகள் மினரல் வாட்டர் வாங்க வேண்டும் என்பதற்காக குடிப்பதற்கு கொடுக்கும் தண்ணீரில் உப்பை கலந்துவிடுகிறார்கள். 50 ரூபாய்க்கு கொடுக்கும் சாப்படிற்கு சாம்பார் ரசம், மோர் என எல்லாமே தண்ணீர் போலதான் இருக்கும்.

காசு கொடுத்து வாங்கியதை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு சிறுநீர் கழிப்பதற்கு போனால் அதற்கும் 2 ரூபாய் பிடுங்கும் இந்த பயனவழி உணவகங்கள் ஆட்சிக்கு தக்கபடி தங்களின் சாயத்தை மாற்றி மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது இந்த பயனவழி உணவகங்களின் கொள்ளைக்கு அரசு போக்குவரத்து கழகமே அங்கீகாரம் கொடுக்கும் விதமாக ஒவ்வொரு போக்குவரத்து கழகமும் அந்த பகுதிகளில் உள்ள பயனவழி உணவகங்களின் உரிமையாளர்களிடம் ஒரு பேருந்து வந்து சென்றால் அந்த கோட்ட போக்குவரத்து கழகத்துக்கு 40 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு உணவாக உரிமையாளரிடம் வசூல் செய்துகொள்கிறார்கள்.

இதனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு ஓசியில் கொடுத்த கோழிக்கறியை இப்போது நிறுத்திவிட்டார்கள். இலவச சிகரெட் ஒரு பாக்கெட் என்ற அளவு போய் இப்போது இரண்டு சிகரெட் மட்டுமே கொடுக்கிறார்கள். அளவில்லா சாப்பாட்டும் இப்போது அளவு சாப்படாகி விட்டது.

இந்த ஓசி சமாச்சாரங்கள் கிடைக்காத காரணத்தால் ஓட்டுனர்கள் சிலர் இந்த பயணவழி உணவகங்களில் நிற்காமல் சென்றதால், எச்சரிக்கையான போக்குவரத்து நிர்வாகம் இப்போது தாங்கள் அங்கீகரித்துள்ள உணவகங்களில் நின்று பயணிகளின் கையில் உள்ள காசையெல்லாம் பிடுங்கி உணவகத்தில் கொடுத்ததற்கு அத்தாட்சியாக உங்களது இன்வைஸ்’ல் உணவக முதலாளியிடம் கையெழுத்து வாங்கிவா.... என்று நடத்துனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது அரசு போக்குவரத்து கழகங்கள்.

எங்களுக்கும், பயணிகளுக்கும் வசதியான பயணவழி உணவங்களில் தான் பேருந்துகளை நிறுத்துவோம் என்று கடந்த திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தினோம். ஆனால் தற்போது அந்தப் பேச்சுக்கே வேலையில்லை என்று ஓட்டுனர்களும், நடத்துனர்களும் புலம்புகின்றனர்.

வருமானத்தை பெருக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு மின்கட்டணம், பேருந்து கட்டணம், பால்விலை என பல அவசியம்மான பொருட்களுக்கு விலை ஏற்றியதுடன் நிற்காமல், கூடுதலாக எலைட் பார்களும் திறக்க உள்ளது.

இன்னும் வருமானம் வேண்டும் என்றால் என்னென்ன செய்வார்களோ என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.

No comments: