Wednesday, December 14, 2011

கார்ப்பரேட் பிடியில் குஜராத்...நடுத்தெருவில் விவசாயிகள்...!



“குஜராத்தைப் பார்! மோடி ஆட்சியின் சாதனையைப் பார்! ’’என்று மோடி ஆட்சியை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடுகின்றன வடநாட்டு ஊடகங்கள். ஆனால் அதன் மறு பக்கத்தை யாரும் பார்ப்பதில்லை.

இந்தியாவின் ஆண்டுச் சராசரி விவசாய வளர்ச்சி 2.9 சதவீதம் மட்டுமே; ஆனால், குஜராத்தின் வளர்ச்சியோ 9 சதம்! மத்திய அரசு மோடியைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்கின்றார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் குஜராத் போல தமிழ்நாடு விவசாயத்தில் முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், குஜராத்தில் விவசாயம் வளர்ந்த அளவுக்கு விவசாயிகள் வளரவில்லை.

வளமான விவசாய நிலங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. விவசாயிகள் நடுத் தெருவுக்கு வந்துவிட்டார்கள். பாரம்பரிய விவசாய முறையை மாற்றியதால், கால்நடைகள் அழிந்து போய்விட்டன. உழவு செய்ய மாடுகள் கிடைப்பதில்லை. மாட்டுக்கு பதில் மனிதர்களை பூட்டி உழவு செய்யும் அவலம் நடந்து வருகிறது.

ஆனால், இன்று குஜராத்தில் ரிலையன்ஸ், அய்.டி.சி., கோத்ரெஜ், ஃப்யூச்சர், மஹிந்திரா, ஹரியாளி கிசான் பஜார், ஏ.சி.அய்.எல்., மகேந்திரா, டீ.சி.ம்.ஸ்ரீராம் போன்ற நிறுவனங்கள் கிராமப்புற சில்லறை வர்த்தகம் மற்றும் விவசாய இடுபொருட்கள் வர்த்தகத்தில் இறங்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றின் விளைவாக, முறைசாரா சிறு உற்பத்தி, கொள்முதல், சில்லறை விற்பனை ஆகியவை ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் காலூன்றி விட்டன.

இன்னும் சில ஆண்டுகளில் குஜராத் மக்களின் மறுபக்கம் வெளி உலகத்திற்கு தெரியும்.

-யோகன்னா யாழினி-

No comments: