Monday, September 26, 2011

போதை விருந்து : எஸ். ஆர். எம். - விஐடி பல்கலைக்கழக, மாணவ - மாணவிகள் கைது.



ஏலகிரியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் மது, போதை விருந்து நடந்துள்ளது. இதில் இரண்டு பிரபல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட 74 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் விஐடி பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 72 மாணவ, மாணவியர் ஏலகிரியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் மது, போதை விருந்து நடத்தியுள்ளனர். இதில் சென்னை, பெங்களூரில் வேலை பார்க்கும் என்ஜினியர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விருந்தில் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துகள் பயன்படுத்தப்படுவதாக் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடு்தது வேலூர் எஸ்.பி. பாபு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஏலகிரியில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள், தனியார் விருந்தினர் மாளிகைகள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

அப்போது ஆரோவில் என்ற விருந்தினர் மாளிகையில் இந்த மது, போதை விருந்து நடப்பதை கண்டுபிடித்தனர். அதில் கலந்து கொண்ட 74 பேரை கைது செய்தனர். பின்னர் 6 பேரைத் தவிர மற்றவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: