Monday, September 26, 2011

நினைவாற்றலை அதிகரிக்கும் ஜின்கோ மாத்திரை.



நினைவாற்றலுக்கு மூளையின் செயல்பாடுகளுக்கும் நம் ஊரில் வல்லாரைக் கீரை சமைத்து உண்கின்றனர். இதில் உள்ள வாலரின் என்னும் ரசாயனம் மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் குறிப்பாக ஞாபக சக்தி இருக்கும் இடமாகிய மெமொரி கார்ட்டெக்ஸைத் தூண்டிவிடுகிறது.

சரஸ்வதியைப் போல மூளையைத் தூண்டிவிடுவதால் புத்தியை தீட்சண்யமாக கூர்மையாக ஆக்குவதால் வல்லாரைக்கு ப்ராமி என்ற பெயரைக் கொடுத்து உள்ளார்கள்.

இதேபோல் ஜின்கோ எனப்படும் சீனாவில் வளரும் மரத்தின் இலைகள் மூளை நரம்புகளை சுறுசுறுப்பாக செயல்படுத்துகிறது. பூமியில் உள்ள மரங்களிலேயே மிகப்பழமையான மரமான ஜின்கோ சீனாவைத் தவிர தற்பொழுது ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஆகிய நாடுகளின் பெரும் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

இலைகள் பசுமை அல்லது மஞ்சள் வண்ண முடையவை. இலைகள், விதைகள் மருத்துவப்பயன் கொண்டவை. இலைகளும், கனிகளும், இலையுதிர்காலத்தில் சேகரிக்கப்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இம்மரத்தின் மருத்துவப்பயன்களுக்கு காரணமாக உள்ள வேதிப்பொருட்கள் ஃபிளேவனாய்டுகள், ஜின்கோலைடுகள், பைலோபலைடுகள்

மூளை நரம்புகளுக்கு வலுவூட்டும்

இலைகள் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி நினைவாற்ற லையும், கவனத்தினையும் அதிகரிக்கிறது. வயோதிக ஞாபக மறதிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மிக அதிகமாக விற்பனையாகும் தாவரமருந்து ஜின்கோ, பல மில்லியன் மத்திய வயதினர் முதல் வயோதிகர்கள் வரை தினமும் ஜின்கோ மத்திரைகளை உட்கொள்கின்றனர்.

ஜின்கோ பிலோபா மூளை, கால்கள், இடுப்பின் உட்புறம் ஆகிய இடங்களில் உள்ள ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும். கோவார்க்டேஷன் எனப்படும் கண்டிஷனுக்கு இதைக் கொடுப்பார்கள். பக்கவாத நோய்களுக்குக் கூட மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

சிறுநீர் நோய்களுக்கு மருந்து

இலைகள் ரத்த ஓட்டத்தினை தூண்டி வலுவேற்றி மருந்தாகிறது. ஆஸ்த்மா மற்றும் அலர்ஜிக்கு எதிரான செயல்புரிகிறது. தசைபிடிப்பு வலி போக்க வல்லது. ஆக்ஸிகரணத்திற்கு எதிரானது. ரத்த அடர்த்தி அதிகரித்து உறைவதை தடுக்க வல்லது ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

விதைகள் ஊது மூச்சு ( Wheezing) விடுதலை தடுத்து சளியினை போக்குகிறது. பெண்களின் வெள்ளைப்போக்கினை தடுக்கவும், சிறுநீர்ப்போக்கு நோய்களுக்கும் மருந்தாகிறது.

No comments: