Thursday, August 4, 2011

சிவகங்கை தேர்தல் வழக்கு : ராஜகண்ணப்பனுக்கு எதிரான ப.சிதம்பரம் மனு தள்ளுபடி .

சிவகங்கை தேர்தல் வழக்கு: ப.சிதம்பரம் மனு தள்ளுபடி

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன், ப.சிதம்பரத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை நீதிபதி கே. வெங்கட்ராஜன் விசாரித்தார். ராஜகண்ணப்பன் மனு வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ப.சிதம்பரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அவர் கூறும் போது, ராஜ கண்ணப்பன் தாக்கல் செய்த தேர்தல் மனுவில் குறைபாடு இருப்பதால் அது தொடர்பான ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரி செய்யப்பட்டன. எனவே ராஜகண்ணப்பனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரி செய்யப்பட்ட காரணத்திற்காக ராஜ கண்ணப்பன்- தேர்தல் மனுவை நிராகரிக்க முடியாது மேலும் 3 வாரத்திற்குள் சிவகங்கை தேர்தல் வழக்கு விசாரணை நடைபெறும் என்றார்.

No comments: