Wednesday, August 10, 2011

உலக அளவில் நடந்த இசை வாணவேடிக்கை போட்டியில் “ஸ்டாண்டர்டு” பயர் ஒர்க் முதலிடம்.

உலக அளவில் நடந்த இசை வாணவேடிக்கை போட்டியில் “ஸ்டாண்டர்டு” பயர் ஒர்க் முதலிடம்: சிவகாசி நிறுவன தொழிற்நுட்ப இயக்குனர் தகவல்

உலக அளவில் நடந்த இசை வாணவேடிக்கை போட்டியில் ஸ்டாண்டர்டு பயர் ஒர்க் முதலிடம் பெற்றதாக தொழிற்நுட்ப பிரிவு இயக்குனர் தெரிவித்தார்.

உலக அளவில் கண்டங்களுக்கு இடையேயான இசை வாணவேடிக்கை போட்டி 3 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பிய கண்டம் சார்பில் கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி பிரான்ஸ் நாட்டில் நடந்தது. பின்னர் இசையுடன் வாணத்தில் வர்ணஜாலம் காட்டும் பல்வேறு டிசைன்களில் வாணவேடிக்கைக்கான போட்டி அங்கு நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில் இத்தாலி, இந்தியா, ஐப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் எங்கள் நிறுவனம் கலந்து கொண்டது. போட்டிக்கு தேவையான வெடிபொருட்களை சீனாவில் உள்ள எங்களது நிறுவனத்தில் இருந்து எடுத்து சென்றிருந்தோம். இந்த இசை வாணவேடிக்கைக்கான பின்னணி இசையை இசையமைப்பாளர் பால்ஜேக்கப் செய்திருந்தார். போட்டி விதிப்படி இந்த இசை 12 நிமிடத்திற்கு கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்த போட்டியில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தன. அதாவது இசையுடன் கூடிய வாண வேடிக்கை சரியாக 12 நிமிட நேரமாக இருக்க வேண்டும் கூடுதலான நேரத்திலோ, குறைவான நேரத்திலோ வெடிக்கக்கூடாது. விபத்துக்கள் ஏற்படக்கூடாது என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தன. விதிமுறையின்படி சிவகாசி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் நிறுவனம் சரியான படி வாணவேடிக்கை நடத்தி காட்டியது. அபாரமாக செயல்பட்டதை தொடர்ந்து இந்தியா சார்பில் நடத்தப்பட்ட எங்கள் நிறுவனத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.

இதுபோன்ற போட்டிகள் நடத்த மத்திய - மாநில அரசுகள் ஊக்கமளித்தால் தேசிய விழாக்களில் நடத்தி காட்ட தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: