Friday, August 12, 2011

ஜாமீனில் வெளியே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது ! திருச்சி சிறையில் அடைப்பு !



சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மிக நெருக்கமாக இருந்துகொண்டு பல சட்டவிரோத காரியங்களை செய்துள்ளார் என்று பலர் புகார் சொல்லிவந்தார்கள்.

ஐந்துரோடு பகுதியில் உள்ள பிரிமியர் மில்லை, அதன் உரிமையாளர்களை மிரட்டி வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வேண்டியவர்கள் பெயரில் எழுதிவாங்கியது மற்றும், அங்கம்மாள் நகர் குடிசிவாசிகளை, அவர்கள் குடியிருந்த இடத்திலிருந்து விரட்டிவிட்டு, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அந்த இடத்தை கைப்பற்ற முழுமூச்சாக செயல்பட்ட போலிஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மீதும் நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த இரு வழக்குகளிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கிவந்த லட்சுமணன், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மூன்று நாட்களாக சேலம் மாநகர் குற்ற புலணாய்வு துறை ஆய்வாளர் அலுவலகத்தில் போலீஸ் விசாரணைக்யை முடித்துக்கொண்டு, 11.08.2011 அன்று மாலை சேலம் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு போலீசார் லட்சுமணனை அழைத்து சென்றார்கள்.

நடுவர் முன் நிறுத்தப்பட்ட லட்சுமணனை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தார் நடுவர். மகிழ்ச்சியுடன் தனது சக அதிகாரிகளுக்கு டாட்டா காட்டியபடி நீதிமன்ற அலுவலகத்திலிருந்து வெளியே வந்த லட்சுமணனை அலுவலக வாசலில் வைத்து சூரமங்கலம் உதவி காவல் ஆணையாளர் கோபி கைது செய்தார்.

பதட்டத்தில் இருந்த லட்சுமணன் குடிக்க தண்ணீர் கேட்டார், போகலாம் வா என்று இழுத்து செல்லப்பட்ட லக்சுமணனை சூரமங்கலம், காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

என்ன வழக்கு என்பதுகூட தெரியாமல் இருந்த பத்திரிக்கையாளர்களிடம், லட்சுமணன் மீது குண்டர் சட்டம் போட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்த மாநகர ஆணையாளர் சொக்கலிங்கம் லட்சுமணன் கைதுக்கான விபரத்தை வெளியிட்டார்.

சேலம், ஐந்து ரோடு பகுதியில் உள்ள புளுமூன் என்ற ஒட்டலில் நான், கடந்த ஏழு வருடங்களாக மேலாளராக வேலை பார்த்து வருகிரேன், நான் தாழ்த்தப்பட்ட்ட பழங்குடியினத்தை சேர்ந்தவன், கடந்த 09.07.2006 அன்று, அப்போது பள்ளபட்டி காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்த லட்சுமணன் என்னை காவல் நிலையத்திற்கு கூப்பிட்டு எனக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் மாமூல் தரவேண்டும் என்று கேட்டார்.

என்னால் அவ்வளவு தொகை தரமுடியாது என்று சொன்னேன், என்னப்பத்தி உனக்கு தெரியாது... நான் ஏற்கனவே ஒரு கொலை செய்துட்டுத்தான் வந்திருகிறேன். மரியாதியா நீ எனக்கு பணம் தரவேண்டும், தரவில்லையானால் உன்னையும் உங்க மொதலாளியையும் கஞ்சா கேசிலும், திருட்டு கேசிலும் புடிச்சு உள்ள போட்டுருவேன் என்று மிரட்டினர். எனது சாதியின் பெயரை சொல்லி திட்டியதுடன், என்னை தொடர்ந்து மிரட்டி பணம் வாங்கிவந்தார். இது பற்றி அப்போதைய
காவல்துறை ஆணையாளர் முதல் முதல் அமைச்சர் வரை 36 புகார்களை அனுப்பியுள்ளேன்.

ஆனால் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் லட்சுமணனுக்கு இருந்த செல்வாக்கால், அதிகாரிகள் இவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சேலம் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார் அருள் என்கிற பாபு.

இவரது புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி சேலம் மாநகர காவல்துறை ஆணையாளருக்கு நீதிமன்றம் உததரவிட்டதை தொடர்ந்து, நீதிமன்ற வாசலில் கைதுசெய்யப்பட்ட லட்சுமணனை சேலம், நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி ஸ்ரீ வித்தியா முன்னர் ஆஜர் படுத்தப்பட்டார்.

லட்சுமணனை 15 நாள் நீதிமன்ற காவலில், வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்திய தண்டனை சட்டம் 387, 389, 506(2) 294 மற்றும் வன்கொடுமை தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்ட லட்சுமணன் சிறையில் அடைக்க திருச்சி சிறைக்கு கொண்டுபோயுள்ளார்கள் சூரமங்கலம் போலீசார்.

No comments: