Saturday, August 13, 2011

தெலுங்கானா போராட்டத்தால் ரூ.8,010 கோடிக்கு வர்த்தகம் மற்றும் உற்பத்தி இழப்பு.

தெலுங்கானா போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.530 கோடி இழப்பு:  வர்த்தக சங்கங்கள் கவலை

ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலம் கோரி போராட்டம் நடந்து வருகிறது. கடையடைப்பு, பேரணி, பொதுக்கூட்டம் மறியல் என்று பலவித போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கடந்த ஒரு வருடமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆந்திராவில் குறிப்பாக ஐதராபாத்தில் வர்த்தகம், வேலைவாய்ப்பு, மற்றும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்தில் 60 ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஐதராபாத் நகரம் இழந்துள்ளது.

இது பற்றி தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் துணை தலைவர் தேவானந்தா சுரானா கூறியதாவது:-

தெலுங்கானாவை வலியுறுத்தி “பந்த்” நடக்கும்போது, ஐதராபாத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.530 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 17 முறை முழு அடைப்பு போராட்டங்களை நடந்துள்ளன. இதன் மூலம் ரூ.8,010 கோடி அளவுக்கு வர்த்தகம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

உற்பத்தி துறையில் மட்டும் நாள் ஒன்று சராசரியாக ரூ.300 முதல் ரூ.350 கோடி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பொருள்கள் சப்ளை பிரிவில் ரூ.150 முதல் ரூ.180 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. தவிர, ஐதராபாத்தில் கடந்த ஒரு ஆண்டில் 60 ஆயிரம் வேலை வாய்ப்புகள் விநியோகம் உள்ளன. சேவை நிறுவனங்களும் நஷ்டத்தை அடைந்து வருகின்றன.

இதுபோல, அனைத்து நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சில நிறுவனங்கள் வேறு பகுதிக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ செல்ல முடிவு செய்துள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments: