Saturday, August 13, 2011

3 நாள் அரசு விடுமுறை திருப்பதி கோவிலில் அலைமோதும் கூட்டம் : தரிசனத்திற்கு 3 கி.மீ. தூரம் பக்தர்கள் காத்திருப்பு.

3 நாள் அரசு விடுமுறை திருப்பதி கோவிலில் அலைமோதும் கூட்டம்:     தரிசனத்திற்கு 3 கி.மீ. தூரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினம் என்று தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். தரிசனத்திற்கு பக்தர்கள் 3 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

இலவச தரிசனத்திற்கு 14 மணி நேரமும், ரூ.50 கட்டண தரிசனத்திற்கு 11 மணி நேரமும், ரூ.300 கட்டண தரிசனத்திற்கு 6 மணி நேரமும் ஆகிறது. சிலநாட்களுக்கு முன்பு மராமத்து பணிக்காக திருப்பதி 2-வது மலைப்பாதை மூடப்பட்டிருந்தது. தற்போது ஏராளமான வாகனங்கள் வந்ததால் திருப்பதி முதல் மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் 2-வது மலைப்பாதையை திங்கட்கிழமை வரை திறக்க ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து போக்குவரத்து நெரிசல் குறைந்தது. நேற்று காலை கோவிலில் உள்ள அங்கபிரதட்சண டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அலைமோதியது. அப்போது ஒருவருக்கொருவர் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர்.

No comments: