Friday, August 19, 2011

சேலம் மாவட்டத்தில் 20 சதவீதம் லாரிகள் ஓடியது : பால் - கியாஸ் - உணவு பொருட்கள் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகிறது.


சேலம் மாவட்டத்திலும் லாரிகள் ஸ்டிரைக் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இந்த வேலைநிறுத்தத்தால் ஏதும் பாதிப்பு வந்து விடாமல் இருக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மயில்வாகனன் தலைமையில் போலீசார் ரோந்து வந்து கண்காணித்தனர்.

லாரி ஸ்டிரைக் நடந்தாலும் சேலம் மாவட்டத்தில் 20 சதவீதம் லாரிகள் ஒடுவதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் 20 சதவீதம் தான் லாரிகள் ஓடுகிறது. 80 சதவீதம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பால், கியாஸ், உணவு பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. லாரிகள் ஸ்டிரைக்கினால் இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: