Friday, August 19, 2011

பி.இ. கவுன்சிலிங் முடிந்தது ; 44 ஆயிரம் இடங்கள் காலி.


தமிழ்நாடு முழுவதும் உள்ள 502 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 47 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த 40 நாட்களாக கவுன்சிலிங் நடந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 8-ந்தேதி தொடங்கிய பொது கலந்தாய்வு இந்த மாதம் 11-ந்தேதி வரை நடந்தது.

அதைத்தொடர்ந்து பிளஸ்-2 உடனடி தேர்வு எழுதியவர்களுக்கும் பின்னர் தொழில் பிரிவை சேர்ந்தவர்களுக்கு துணை கவுன்சிலிங் நேற்று வரை நடந்து முடிந்தது ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 564 பேரின் விண்ணப்பங்கள் தகுதி உடையதாக இருந்தது. அவற்றில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 166 இடங்கள் மட்டும் நிரம்பி உள்ளன.

அறிவியல் பாடப்பிரிவில் ஒரு லட்சத்து 6182 இடங்கள் நிரம்பியது. இதில் 43,393 இடங்கள் காலியாக உள்ளன. தொழில் பாடப்பிரிவில் 3984 இடங்கள் மட்டும் நிரம்பின. 746 இடங்கள் காலியாக இருக்கின்றன. மொத்தம் 44,139 என்ஜினீயரிங் இடங்கள் நிரம்பாமல் உள்ளன. கடந்த ஆண்டு 12 ஆயிரம் இடங்கள் காலியாக கிடந்தன. பி.இ. படிப்பிற்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) முதல் எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது.

No comments: