Friday, July 15, 2011

அரசுப் பள்ளிக்கூடத்தில் தனது மகளை சேர்த்த ஈரோடு கலெக்டர் திடீர் மாற்றம்.



ஈரோடு மாவட்ட கலெக்டர் அனந்தகுமார் திடீர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து அனைவரையும் அதிசயிக்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.அனந்தகுமாருக்கு பதிலாக, போக்குவரத்துத்துறை துணை செயலாளர் சி.காமராஜ், அந்தப் பணியில் இருந்து மாற்றப்பட்டு, ஈரோடு மாவட்ட கலெக்டராக நியமிகப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது மகளை கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்கு தனது மகளை சேர்த்து விட்டார் அனந்தகுமார். இது அனைவரையும் வியப்படைய வைத்தது. மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து அனைவரது பாராட்டுக்களையும் அப்போது அனந்தகுமார் பெற்றார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையி்ல் அனந்தக்குமார் மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல மீன்வளத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குநர் கே. செல்லமுத்து மாற்றப்பட்டு, தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் பி.சந்திரமோகனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: