Friday, July 15, 2011

நித்யானந்தா புகார் : நக்கீரன் கோபால் முன்ஜாமீன் மனு.

நித்யானந்தா புகார்: நக்கீரன் கோபால்    முன்ஜாமீன் மனு

நடிகை ரஞ்சிதா, நித்யானந்தா சாமியுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் இந்த ஆபாச வீடியோ காட்சிகள் சன் டி.வி.யில் ஒளிபரப்பானது. நக்கீரன் வார இதழிலும் ரஞ்சிதா - நித்யானந்தாவின் ஆபாச படங்கள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தின் மேலாளர் நித்ய பரமானந்தா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நித்யானந்தாவின் ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்காக ரூ. 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின், சன் டி.வி. சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன், நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோரது பெயர்கள் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படாததால் தற்போது புகார் கொடுத்துள்ளதாகவும் நித்யபரமானந்தா கூறியிருந்தார்.

இந்த புகார் மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

No comments: