Saturday, July 23, 2011

உட்கட்டாசனம், பத்ம உஜ்ஜயி, பத்ராசனம்.

உட்கட்டாசனம்.
உட்கட்டாசனம்

செய்முறை:

படத்தில் காட்டியபடி நாற்காலியில் உட்காருவது போல் கைகளை முன்பே நீட்டி பத்து விநாடிகள் நில்லுங்கள். பின் நிமிர்ந்து நின்று மூச்சினை நன்கு இழுத்து விடுங்கள். மீண்டும் செய்யுங்கள். மூன்று முதல் ஐந்துமுறைகள் செய்ய வேண்டும். தனியாக நிற்க இயலாத வயதானவர்கள் சுவற்றில் படத்தின்படி நின்று நன்கு பழகிய பின்னர் தனியாக நிற்கலாம்.

பலன்கள்:

இதயம், தொடைகள், இடுப்பு, முழங்கால்கள், கெண்டைக்கால்கள் முதலியவை வலுப்பெறும். இதனை ஐந்து முறைகள் செய்தால் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி பலன் பெறுவீர்கள். புத்துணர்ச்சி ஏற்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். பேரழகு உண்டாகும்.


பத்ம உஜ்ஜயி.
பத்ம உஜ்ஜயி

செய்முறை:

பத்மாசனத்தில் இருந்தபடியே கைகளை மேலே தூக்கி கைவிரல்களை கோர்த்துக் கொள்ளவும். அப்படியே புரட்டி உள்ளங்கைகள் மேலே பார்க்குமாறு வைத்து வாயை மூடி மூச்சை ஒரே சத்தமாக வெளியே தள்ளவும். 10 அல்லது 15 முறை செய்யவும்.

பத்ம உஜ்ஜயியில் மூச்சை தள்ளும்போது நுரையீரலுக்கு அதிக காற்று உட்செல்கிறது. இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுகின்றது. பந்து அடிவயிற்றிலிருந்தது கிளம்பி மூக்கு வழியாக வருவதுபோல் நினைத்து காற்றை வெளியே வேகமாகத் தள்ளவும்.

பலன்கள்:

ஆஸ்துமா, சைனஸ் தொல்லைகள், ஒருபக்க தலைவலி, கண்பார்வை கோளாறுகள், காதுநோய் முதலியவை அகலும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகி, சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும் உண்டாகும். எந்த நேரமும் இன்பமான மனஉறுதி உண்டாகும். இதய பலவீனம் அகன்று பலமாகும். பெண்களுக்கு முடி கொட்டுவது நிற்கும். முடி வளரும்.


பத்ராசனம்.
பத்ராசனம்

செய்முறை:

பத்மாசனமிட்டு கைகளை மேலே தூக்கவும். உள்ளங்கைகளை புரட்டி மேலே பார்க்குமாறு அமைத்து மூச்சை வெளியே விட்டு முடிந்தவரை குனியும்போது விரித்த கைகளை கும்பிட்டபடியே தரையில் வைக்கவும். 20 எண்ணும் வரை இருந்து, நிமிரும்போது மூச்சை இழுத்துக் கொண்டு நிமிரவும். இதனை நன்றாக 20 தினங்கள், பழகிய பின்னர் இரண்டாவது நிலையினைச் செய்யவும்.

குறிப்பு:

3 முதல் 5 தடவைகள் செய்யலாம். வயிறு, இதய ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக்கூடாது.

பலன்கள்:

முதுகெலும்பு நரம்புகள், தொடை நரம்புகள் பலமாகும். முதுகெலும்பு பிடிப்பு நேராகும். மலச்சிக்கல், இருதயப்பலவீனம் நீங்கும். வயிற்றினுள் உள்ள உள்ளுறுப்புகள் நன்கு வேலை செய்யும். நீரிழிவு நோய் அகலும். இளமையுண்டாகும். நல்ல ஞாபகசக்தி உண்டாகும். சுறுசுறுப்பு ஆரோக்கியம் நிலைத்து நிற்கும்.

No comments: