Sunday, July 24, 2011

குக்குடாசனம், சதுர கோணாசனம், உதித்தகாடி ஐக்கியபாத சக்ராசனம், வஜ்ரோலி முத்ரா நவாசனம்,

குக்குடாசனம்.
குக்குடாசனம்


குக்குடம் என்றால் கோழி என்று பொருள்படும். என்ன - நாம் மனிதனாக இருக்கிறோம். மனிதனைவிட மிருகங்களுக்கு ஓர் அறிவு குறைச்சல், அதன் பெயரை சூட்டி அழைப்பதன் மூலம் நாம் இன்னும் கீழே அல்லவா செல்கிறோம் என்று ஒரு என்ஜீனியர் அன்பர் கேட்டார்.

ஒவ்வொரு விலங்கினம், பறவையிடமும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு. அதன் ஆற்றலை பெறவே மறைமுகமாக இப்பெயரை சித்தர்கள் சூட்டியுள்ளனர். அது போல் இவ்வாசனம் செய்வதன் மூலம் சில சூட்சுமங்கள் ரகசியமாக விளக்கப்படுகின்றன. நீங்கள் இவ்வாசனத்தை பழகி வரும் போது உடலின் உணர்வுகளை நரம்பு துடிப்புகளால் அறிந்து கொள்வீர்கள்.

செய்முறை:

பத்மாசனமிட்டு முன்னுள்ள தொடையிடுக்கில் கீழ் மெதுவாக கை விரலை நுழைக்கவும். பின்னர் கைகளை உள்ளே விட்டு உள்ளங்கைகள் நன்றாக தரையில் ஊன்றிய படி எழவும், 20 எண்ணும் வரை இருந்து பின் அமரவும், ஓய்வெடுத்த பின் செய்யவும், 3 முதல் 5 தடவைகள் செய்யலாம்.

பலன்கள்:

கல்லீரல், மண்ணீரல், தீனிப்பை நன்கு செயல்படும். இதயம் பலம் பெறும். மனம் ஒரு நிலைப்படும். முழங்கால் மூட்டு வலி, நீங்கும். உடல் பாரம் முழுவதும் கைகள் தாங்கி நிற்பதால் கைகள், புஜங்கள், தோள் பட்டைகள் அதிகமான பலம் பெறும்.


சதுர கோணாசனம்.
சதுர கோணாசனம்

செய்முறை:

இடது காலை பின்னால் மடக்கி வைக்கவும், வலது கையால் வலது காலை மேலே தூக்கி, இடது கையால் தலையைச் சுற்றி, இரு கைகளை கோர்த்துப் பிடிக்கவும். 20 எண்ணும் வரை இருந்து கைகளை விடுவித்து காலை கீழே போடவும். ஓய்வெடுத்து அடுத்த பக்கம் செய்யவும்.இவ்வாறு நான்கு முறை செய்யவும்.

பலன்கள்:

இதயம், நுரையீரல் நல்ல பலம் பெறும். சுறுசுறுப்பு, ஞாபக சக்தி அதிகரிக்கும்.


உதித்தகாடி ஐக்கியபாத சக்ராசனம்.
உதித்தகாடி ஐக்கியபாத சக்ராசனம்
செய்முறை:

இரு கால்களையும் மூச்சை இழுத்தபடியே மேலே தூக்கவும். இரு கைகளினால் புட்டங்களை தூக்கிப் பிடிக்கவும். இடது காலின் குதிகாலை வலது முழங்காலில் வைக்கவும். முழங்காலில் முகவாய்க் கட்டையை வைக்கவும். 20 எண்ணும் வரை இருந்து பின்னர் கீழே படுக்கவும். பின்னர் வலது புறம் செய்யவும். 4 முதல் 6 தடவைகள் செய்யவும்.

பலன்கள்:

இரைப்பை, பித்தப்பை, குடல்கள் எல்லாம் அழுத்தி கசக்கப் படுவதால் சோர்வு அகன்று, சுறுசுறுப்பு அதிகமாகும். சிறுநீரகம் நன்றாக செயல்படும். மூல வியாதி அகலும். இதயத்திற்கு நல்ல பலமுண்டாகும்.


வஜ்ரோலி முத்ரா நவாசனம்.
வஜ்ரோலி முத்ரா நவாசனம்

செய்முறை:

தொடைகளை ஒட்டி இடுப்பை அணைத்தவாறு கைகளை தரையில் நன்றாக ஊன்றிக் கொள்ளவும். மூச்சை வெளியே விட்டு இரு கால்களையும் மேலே தூக்கவும். 20 எண்ணும் வரை இருந்து கால்களை கீழே போடவும். நான்கு தடவைகள் செய்யவும்

பலன்கள்:

அடி வயிறு நன்கு கசக்கப்படுகிறது. வயிற்றினுள் உள்ள உறுப்புகள் சுத்தமாவதுடன் புதிய உத்வேகம் பெறும். இதயம் பலமாகும். கால்களில் உள்ள வலிகள் அகன்று பலம் பெறும். மூல வியாதிகள் அகலும்.

1 comment:

மனசாலி said...

GOOD POST
IF U HAVE TIME MEAN VISIT MY BLOG
http://manasaali.blogspot.com