Friday, July 8, 2011

இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது.



“தயாநிதி மாறன் பதவியிலிருந்து இறங்குவது குறித்து, டில்லியிலிருந்து யாரும் என்னைத் தொடர்பு கொண்டு கேட்கவில்லை” இவ்வாறு கூறியுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி, பிரதமர் தன்னுடன் பேசவில்லை என்று கூறுவதை சாமர்த்தியமாகத் தவிர்த்துக் கொண்டார்!

பிரதமரும் சோனியாவும் இதுபற்றி உங்களிடம் நேற்றிரவே பேசியதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளதே என்று அவைரிடம் கேட்கப்பட்ட போது, ”சோனியா நேற்றிரவு என்னுடன் பேசவில்லை” என்று கூறியதுடன் நிறுத்திக் கொண்டார். பிரதமர் பற்றி வாயே திறக்கவில்லை.

“தயாநிதியின் பதவி விலகலுக்கக் காரணம், மீடியாக்கள் அவரை இழிவு படுத்தியதுதான்” என்றும் கூறியுள்ளார் அவர்.

“இன்று உலகில், குறிப்பாக இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால், யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்; அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல. மீடியாக்கள் அவரைக் குற்றவாளிபோல சித்தரித்துக் காட்டியதால் அவர் பதவி விலகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

No comments: