Friday, July 29, 2011

750 இடங்களை நிரப்ப மருத்துவப் படிப்பு : 2-வது கட்ட கவுன்சிலிங் தொடங்கியது.

750 இடங்களை நிரப்ப மருத்துவ படிப்பு: 2-வது கட்ட    கவுன்சிலிங் தொடங்கியது

மருத்துவப் படிப்பு 2-வது கட்ட கவுன்சிலிங் இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக் கல்லுரியில் 1653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது. இதற்கான கவுன்சிலிங் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது. இதில் எஸ்.சி. மற்றும் பி.சி. பிரிவுக்கான 5 இடங்கள் தவிர அனைத்து இடங்களும் நிரம்பி விட்டது.

கடந்த 22-ந்தேதி கல்லூரி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இன்று தொடங்கியது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 599 அரசு இடங்கள் உள்ளது. மேலும் புதிதாக அனுமதி அளிக்கப்பட்ட மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மூலம் 150 இடங்கள் அரசுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் இந்த எண்ணிக்கை 750ஆக உயர்த்துள்ளது. இவைகள் தவிர ஏற்கனவே காலியாக இருக்கும் 5 இடங்களுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது.

இன்றைய தினம் 500 மாணவ - மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர பல் மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கும் இன்று நடக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் 73 இடங்களும் தனியார் பல் மருத்துவ கல்லூரியில் 847 இடங்களும் நிரப்பப்படுகிறது. வருகிற 4-ந்தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது.

No comments: