Sunday, July 17, 2011

16 லட்சம் கடனுக்கு ரூ.50 லட்சம் வசூல் ; கந்துவட்டி வசூலித்த தொழில் அதிபர் கைது.

16 லட்சம் கடனுக்கு ரூ.50 லட்சம் வசூல்; கந்துவட்டி வசூலித்த தொழில் அதிபர் கைது

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் விஜய் . இவர் வியாபாரத்துக்காக அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு என்பவரிடம் ரூ.16 லட்சம் கடன் வாங்கினார். இதற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வீதம் கடந்த 18 மாதங்களாக வட்டி கட்டி வந்தார்.

வியாபாரம் சரியாக நடக்காததால் தொடர்ந்து வட்டி கொடுக்க முடியாமல் திணறினார். இதில் கோபம் அடைந்த ரமேஷ்பாபு அடிக்கடி விஜய் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். இதனால் விஜய் தனது வீட்டை விற்று வட்டி தொகையை கொடுத்து வந்தார்.

மொத்தம் ரூ.50 லட்சம் வரை வட்டி கொடுத்து விட்டார். ஆனாலும் ரமேஷ் பாபு கடந்த ஒரு வாரமாக மிரட்டி இன்னும் ரூ.10 லட்சம் வேண்டும் என்றார். இதுபற்றி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி தொழில் அதிபர் ரமேஷ்பாபுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

No comments: