Sunday, July 17, 2011

வகுப்பறையில் புகுந்து கத்திக்குத்து கல்லூரிக்குள் மோதல் ; 14 மாணவர்கள் கைது.

வகுப்பறையில் புகுந்து கத்திக்குத்து    கல்லூரிக்குள் மோதல்;    14 மாணவர்கள் கைது

கோவை அவினாசி ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.பி.ஏ.. சி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கும், பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலருக்கும் நேற்று முன்தினம் கேண்டீ னில் தகராறு ஏற்பட்டது. இதனை 2-ம் ஆண்டு பி.பி.ஏ., சி.ஏ., மாணவர்கள் தட்டிக்கேட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த பிகாம் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து 2-ம் ஆண்டு மாணவர்களை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கல்லூரியில் மதிய இடை வேளையின் போது 2-ம் ஆண்டு பி.பி.ஏ., சி.ஏ., படிக்கும் மாணவர்கள் ஒன்று திரண்டு 3-ம் ஆண்டு பி.காம். படிக்கும் மாணவர்களின் வகுப்பறைக்கு சென்று உருட்டுக்கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

இதில் பி.காம். மாணவன் தமிழ்செல்வன் என்பவருக்கு கத்திக் குத்து விழுந்தது. அதே போல் கவுதம் பெல்லா என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. மாணவர்கள் மோதலால் கல்லூரி வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடினர். போலீசார் வழக்கு பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சேர்ந்த வினோத், கார்த்திக், சதீஷ்குமார், அலெக்ஸ், சரவணன், தேவா, கண்ணன், தமிழ்செல்வன், தேவராஜ், கவுதம், பிரதீப் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

No comments: