Tuesday, June 28, 2011

கிரிக்கெட் மட்டையால் அடித்து வாலிபர் கொலை தோல்வி அடைந்ததால் எதிர்அணியினர் ஆத்திரம்

கிரிக்கெட் மட்டையால் அடித்து வாலிபர் கொலை: தோல்வி அடைந்ததால் எதிர்அணியினர் ஆத்திரம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ராவூரி வான்ட்ல பள்ளி, நாராயணரெட்டி பள்ளி ஆகிய கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. இரு கிராமங்களைச் சேர்ந்த வீரர்கள் கிரிக்கெட் ஆடினார்கள்.

இதில் நாராயணரெட்டி பள்ளி அணி தோல்வி அடைந்தது. அந்த அணியின் கேப்டன் பிரதாப் ரெட்டி மற்றும் வீரர்கள் ராவூரிபான்ட்ல பள்ளி அணி வீரர் கேசவ ரெட்டியிடம் சென்று, நீ பந்து போடும் முறை சரி அல்ல. நீ பந்தை எறிவதால்தான் நாங்கள் “அவுட்” ஆனோம் என்றனர்.

அதற்கு அவர் நான் சரியாகத்தான் பந்து போட்டேன். உங்களுக்கு “பேட்டிங்” செய்ய தெரியவில்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதாப்ரெட்டி மட்டையால் கேசவ ரெட்டியை சரமாரியாகத் தாக்கினார். அப்போது அவரது அணியினரும் சேர்ந்து மட்டையால் அடித்தனர்.

இதில் மண்டை உடைந்து கேசவரெட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். இதுகுறித்து மதனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து நாராயணரெட்டி பள்ளி வீரர்களை தேடி வருகிறார்கள்.

No comments: