Tuesday, June 28, 2011

நடிகர் கார்த்தி திருமணம்... முதல்வருக்கு நேரில் அழைப்பு.



முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

ஜூலை 3-ம் தேதி கோவையில் நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்துமாறு அழைப்பு விடுத்தனர்.

இச்சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கின் திருமணம் ஜூலை 3-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி வரும் ஜூலை 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டுமென சிவகுமார் குடும்பத்தினர் முதல்வருக்கு அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

இத்தகவல், தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு சூர்யா - ஜோதிகா திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தவரே ஜெயலலிதாதான். இப்போது கார்த்தி திருமணம் அல்லது வரவேற்புக்கு கட்டாயம் நேரில் வந்து வாழ்த்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறுது.

No comments: