Tuesday, June 28, 2011

வகுப்பறையில் கூச்சல் போட்டதால் 31 மாணவிகளின் கையை முறித்த ஆசிரியர் : டிஸ்மிஸ் செய்யகோரி பெற்றோர் போராட்டம்.

வகுப்பறையில் கூச்சல் போட்டதால்  31 மாணவிகளின் கையை முறித்த ஆசிரியர்: டிஸ்மிஸ் செய்யகோரி பெற்றோர் போராட்டம்

வகுப்பறையில் கூச்சல் போட்ட 31 மாணவிகளின் கையை முறித்தார் ஒரு ஆசிரியர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தேவலசெருவு பள்ளி கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு இந்தி ஆசிரியராக பணியாற்றுபவர் சந்திரசேகர். இவர் மாணவிகளிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வார்.

சின்ன தவறு செய்தால் கூட அடி பின்னி எடுத்து விடுவார். இந்த நிலையில் அவர் 7-ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றபோது, மாணவிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். இதனால் அங்கு ஒரே கூச்சலாக இருந்தது. இதைப் பார்த்ததும் அவர் ஆவேசம் அடைந்தார். பிரம்பை எடுத்து ஒவ்வொரு மாணவியாக அழைத்து கையில் சரமாரியாக அடித்தார்.

இதில் 31 மாணவிகளின் கை முறிந்து போனது. வலி தாங்காமல் அனைவரும் அலறித்துடித்தனர். இதை அறிந்ததும் அக்கம் பக்கத்து வகுப்பறைகளில் இருந்து ஆசிரியர்கள் ஓடிவந்தனர். பின்னர் மாணவிகள் அனைவரையும் மதன பள்ளியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ரேகா, மாதவி, காயத்ரி, ரேவதி ஆகிய 4 பேரின் கை எலும்புகள் உடைந்து நொறுங்கி உள்ளன. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 31 மாணவிகளின் கையை முறித்த ஆசிரியர் சந்திரசேகரை டிஸ்மிஸ் செய்ய கோரி பெற்றோர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments: