Monday, June 27, 2011

கொடைக்கானலில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

கொடைக்கானலில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கொடைக்கானலில் உள்ள பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயாவின் சார்பில் 75-வது சிவ ஜெயந்தி பவல விழாவினையொட்டி 12 ஜோதிர்லிங்கம் மற்றும் அமர்நாத் பனிலிங்க சிவ தரிசன தொடக்க விழா கொடைக்கானலில் உள்ள கோல்டன் பார்க் இன் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் தியானம், தீப தியானம், ஒலி-ஒளி காட்சிகள், சொர்க்க காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. தரிசன நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் தரிசித்தனர். இத்தரிசன நிகழ்ச்சி வரும் 29-ம்தேதி வரை நடைபெறுகின்றனது.