Tuesday, May 31, 2011

மருத்துவம் ஜுன் 2 - என்ஜினீயரிங் விண்ணப்பம் வாங்க இன்று கடைசி நாள்.


என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வாங்குவதற்கு இன்று (31.05.2011) கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 486 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர கடந்த 16 ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன.

இதுவரை ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றுள்ளனர். விண்ணப்பம் வாங்குவதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஜுன் 3 ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜுலை முதல் வாரத்தில் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மருத்துவ படிப்பைப் பொருத்தவரையில் தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 8 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. ஒரேயொரு அரசு பல்மருத்துவக் கல்லூரியும் 17 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் இருக்கின்றன. கவுன்சிலிங் மூலம் 2,288 எம்.பி.பி.எஸ். இடங்களும், 976 பி.டி.எஸ். சீட்டுகளும் நிரப்பப்பட உள்ளன.

மேலும், சென்னை மருத்துவக் கல்லூரியிலும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும் கூடுதலாக 200 இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டு உள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வாங்குவதற்கு ஜுன் 2 ந் தேதி கடைசி நாள் ஆகும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர கடந்த 16 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இதுவரை 22 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. விண்ணப்பங்கள் வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் ஜுன் 2 ந் தேதி கடைசி நாள் ஆகும். ரேங்க் பட்டியல் 21 ந் தேதியும், முதல்கட்ட கவுன்சிலிங் 30 ந் தேதியும் தொடங்கும் என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

No comments: