Friday, April 15, 2011

இலங்கை இறுதிப் போரில் 70 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் பலி: அமெரிக்க கருத்தரங்கில் தகவல்.

அமெரிக்காவின் மெக்ஸ்வல் கல்லூரியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரிவின் ஏற்பாட்டில் ஸ்ரகியூஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அமைதிக்கான தமிழர் இயக்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுள் ஒருவரான கலாநிதி அருள்நாதன்,

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது 70 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கு மேலாக இறுதிக்கட்ட போரின் போது 13 ஆயிரத்து நூற்றி முப்பதுக்கும் மேலானோர் காணாமற் போயுள்ளதாகவும் ஆதாரபூர்வமான புள்ளிவிபரங்கள் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். இச்செய்தி இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகி உள்ளன.

இந்த கருத்தரங்கில் இலங்கையின் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதி கலாநித பாலித கொஹன, மற்றும் அமெரிக்க, இலங்கை அரசுகளின் பிரதிநிதிகளும் மேலும் பல முக்கிய பிரநிதிகளும் கலந்து கொண்டதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகி உள்ளன.


No comments: