Friday, September 16, 2011

நல்லக்கண்ணு வந்த காரை மடக்கிய எச்.டி.எப்.சி. வங்கி ஊழியர்கள் 8 பேர் மீது கொலை முயற்சி வழக்கு : போலீசில் ஒப்படைக்க உத்தரவு .

நல்லக்கண்ணு வந்த காரை மடக்கிய வங்கி ஊழியர்கள் 8 பேர் மீது கொலை முயற்சி வழக்கு: போலீசில் ஒப்படைக்க உத்தரவு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, சென்னை நுங்கம்பாக்கம் அருகே காரில் சென்ற போது அந்த காரை சிலர் வழி மறித்தனர். நண்பரின் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கார் கடனுக்காக வழிமறித்து காரை பறிமுதல் செய்ய வந்திருப்பதாக தெரிவித்தார்.

அப்போது அந்த கும்பலுக்கும் அவரது நண்பருக்கும் இடையே தகராறு ஏற்படவே நல்லக்கண்ணு ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றார். இந்த சம்பவம் காட்டுத் தீ போல் பரவியது.

நல்லக்கண்ணு சென்ற காரை மறித்தது யார்? என்று பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

கார் டிரைவர் சுதிர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் எச்.டி.எப்.சி. வங்கியில் வாங்கிய கார் கடனுக்காக வங்கி ஏஜெண்டுகள் 8 பேர் இந்த அடாவடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் (147), தடுத்து நிறுத்தல் (341), கெட்டவார்த்தை பேசுதல் (299 (பி)), கொலை மிரட்டல் 506 (1) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 பேரையும் உடனடியாக போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த தனியார் வங்கியை போலீசார் எச்சரித்துள்ளனர்.

No comments: