Wednesday, July 20, 2011

நில அபகரிப்பு வழக்கு : வீரபாண்டி ஆறுமுகம் மீது சேலம் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு.



திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

கட்டப்பஞ்சாயத்துகளின் மூலம் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்போர் மற்றும் அபகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததன் பேரில் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி தவறு செய்த தி.மு.க.வினர் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் வேளாண்துணை அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகம் மீது நில அபகரிப்பு வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் அங்கம்மாள் காலணியில் இருந்து மக்களை விரட்டி விட்டு அவர்கள நிலத்தை அபகரித்தது சம்பந்தமாக ஒரு வழக்கும்,

சேலம் பிரிமியர் மில் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் இருந்து அபகரித்தது சம்பந்தமாக ஒரு வழக்கும்,

இன்று சேலம் மாநகர காவல்துறை குற்றப்பிரிவு அலுவலகத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.