Saturday, July 9, 2011

தில்ஷனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி லெப்டினெட் கர்னல் அஜித்சிங்.



சென்னை தீவுத்திடல் அருகே உள்ள காந்தி நகர் குடிசை பகுதியை சேர்ந்த சிறுவன் தில்ஷன் சில நாட்களுக்கு முன்பு ராணுவ அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரியை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கடந்த 7 நாட்களாக விசாரணை நடத்தியும் தில்ஷன் கொலையில் எந்த துப்பும் துலங்கவில்லை

சிறுவன் தில்ஷன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை வைத்து, துப்பு துலக்கி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், ராணுவ அதிகாரிதான் குற்றவாளி என்கின்றனர்.

ராணுவத்தின் தரப்பிலோ சிறுவன் தில்ஷான் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளான சிறுவர்கள், தில்ஷனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரியை அடையாளம் காட்டினர். அவர் லெப்டினெட் கர்னல் அஜித்சிங் என்னும் பஞ்சாபியர் ஆவார்.

அவர் சம்பவ நேரத்தில் தான் அங்கு இல்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் செல்போன் டவர் ரிப்போட்படி அவர் அங்கிருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சிறுவனை சுட்டுக் கொன்றது எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவர் சட்டத்தின் முன்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழகத்தின் குரலாகும்.

இந்த நிலையில் டி.ஜி.பி. ராமானுஜம் சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டார். துப்பாக்கி சூடு நடந்த ராணுவ பகுதியில் நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ராணுவ கமாண்டிஸ் மேஜர் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து இன்று அல்லது நாளைக்குள் சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு பிறகு இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்படுகிறார்.

No comments: