Saturday, July 9, 2011

டெலிபோன் ஒட்டுக் கேட்பு ; 168 ஆண்டுகால பத்திரிகை மூடப்படுகிறது.

டெலிபோன் ஒட்டு கேட்பு இங்கிலாந்து பிரதமரின்    உதவியாளர் கைது;    168 ஆண்டு பத்திரிகை மூடப்படுகிறது

இங்கிலாந்தின் பிரபல பத்திரிகை நியூஸ் ஆப் த வேல்டு. இது 168 ஆண்டு காலம் பழமைவாய்ந்த புகழ் பெற்றப் பத்திரிகை. குற்றம் மற்றும் அரசியல் செய்திகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இப்பத்திரிகை இணைப்பு பகுதி டேப்லாஸ்டு வடிவில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்தது.

இதற்கிடையே அரசியல்வாதிகள், போலீசார் மற்றும் பிரபலங்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்து, டெலிபோன் ஒட்டு கேட்பு மூலம் தகவல்களை பெற்று செய்தி களை வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது.

கடந்த 2005-ம் ஆண்டு லண்டனில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், ஆப்கானிஸ்தான் போரில் உயிரிழந்த இங்கிலாந்து வீரர்கள் மற்றும் விளையாட்டில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சிக்கியது போன்ற தகவல்களை வெளியிட்டது. மேலும் தனிப்பட்ட நபர்களின் செல்போன் களையும் வழி மறித்து தகவல்களை திரட்டி செய்தி வெளியிட்டது.

இது போன்று கடந்த 6 ஆண்டுகளாக இப்பத்திரிகை சர்ச்சையில் சிக்கி இருந்தது. இப்பத்திரிகையின் செயலுக்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இதை தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்த பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டார். விசாரணையில் டெலிபோனில் ஒட்டு கேட்டு செய்தி வெளியிட்டது உண்மை என்றும், அதற்காக ரூ.7 ஆயிரம் கோடி லஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அந்த பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஆண்டி கவ்ல்சன் கைது செய்யப்பட்டார். இவர் அப்பத்திரிகையில் 2003 முதல் 2007-ம் ஆண்டு வரை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் பிரதமர் டேவிட் கேமரூனின் முன்னாள் மீடியா உதவியாளராகவும் இருந்துள்ளார். தற்போது இவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

நியூஸ் ஆப் தி வேல்டு பத்திரிகையின் உரிமையாளர் ரூபர்ட் முர்டோக்கால், தற்போது இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து 168 ஆண்டுகளாக நடத்தி வந்த இந்த பத்திரிகை நாளை 10-ந்தேதி முதல் மூடப்படுகிறது. இந்த அறிவிப்பை உரிமையாளர் ரூபர்ட்முர் டோக்கால் வெளியிட்டார்.

No comments: