Tuesday, August 9, 2011

விருச்சாசனம், கருடாசனம், குதபாதாசனம்.

விருச்சாசனம்.
விருச்சாசனம்

செய்முறை:

நேராக நின்ற நிலையில் வலதுகாலை மடக்கி, இடது தொடையில் வையுங்கள். இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, உடலை சமன் செய்தபிறகு, தலைக்கு மேல் கும்பிட்டநிலையில் நிலை நிறுத்தவும். கண்பார்வையை ஒரு புள்ளியில் குவியுங்கள். இதேபோன்று இடதுகாலை மடக்கியும் செய்யவும்.

பயன்கள்:

நினைவாற்றல் பெருகும். பதட்டம் குறையும். கால், மூட்டு நோய்கள் அகலும். `வாக்கிங்' போவதைவிட, பல மடங்கு பயன்தருவது, விருச்சாசனம் மட்டுமே!


கருடாசனம்.
கருடாசனம்

செய்முறை:

நேராக நிமிர்ந்து நில்லுங்கள். உங்களின் வலது கால், இடதுகாலோடும், வலதுகை, இடது கையோடும் பின்னி நிற்கட்டும். கைகளிரண்டையும் புருவ மத்திக்கு கொண்டு வந்து, மூக்கோடு பொருத்துங்கள்.

இது உங்களின் கண்கள், அந்தந்த பக்கத்தை தனியாக பார்ப்பதாக இருக்க வேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து, பிறகு ஆசனத்தை கலைத்து விடுங்கள். அடுத்தபடியாக கால்களை மாற்றி, மீண்டும் அதேபோல செய்யவும்.

பயன்கள்:

உடம்பு தசைப்பிடிப்போடு திகழும். கண் பார்வை பிரகாசமாகும். முகம் அழகுபெறும். கை-கால் நரம்புகள் வலுவடையும். ஹிரண்யா, விரைவீக்கம் வராது. தொடை, பிருஷ்டபாகம் எடை குறையும்.

மாலைக்கண், நிறக்குருடு, கிட்டப்பார்வை, தூரப்பார்வை இருப்போர், தொடர்ச்சியாக கருடாசனம் செய்துவந்தால், மிகுந்த பலன்கள் கிட்டும்.


குதபாதாசனம்.

குதபாதாசனம்

செய்முறை:

இரண்டு உள்ளங்கால்கள் மீது அமரவும். உங்களின் நெற்றி தரையை தொடும்வகையில், அப்படியே குனியுங்கள். இயல்பான சுவாசம் இருக்கட்டும்.

பயன்கள்:

கர்ப்பவதிகளுக்கு சுகப்பிரசவம் கிட்டும். மாதவிடாய் கோளாறு நீங்கும். விரை வீக்கம், ஹிரண்யா, மூலநோய் நீங்கும். தாம்பத்ய உறவில் போக இச்சை கூடும். காய கற்பம் தேவையிராது. குதபாதாசனத்தை சரியாகச் செய்தால், நல்ல பலன் கிட்டும்.

No comments: