Saturday, June 18, 2011

சீன அதிகாரிகள் சுருட்டிய ரூ.6 லட்சம் கோடி ஊழல் பணம் வெளிநாட்டு பாங்கிகளில் பதுக்கல்.

சீன அதிகாரிகள் சுருட்டிய ரூ.6 லட்சம் கோடி ஊழல் பணம் வெளிநாட்டு பாங்கிகளில் பதுக்கல்

சீனாவில் ஊழல் மலிந்துவிட்டது எனக் கூறி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, ஊழல் நடைபெறுவதை சீன அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனாவின் மத்திய வங்கி ஒரு குழு அமைத்தது.

அந்த குழுவினர் சமீபத்தில் அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், சீன அதிகாரிகள் ரூ.6 லட்சம் கோடி லஞ்ச பணம் சம்பாதித்ததாக கூறப்பட்டுள்ளது. 16 ஆயிரம் முதல் 18 ஆயிரம் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1990 முதல் 2008-ம் ஆண்டு வரை இந்த மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. வர்த்தக ரீதியாக பணபரிமாற்றம் செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து இவற்றை லஞ்சமாக பெற்றுள்ளனர்.

இந்த பணத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாலந்து ஆகிய நாடுகளில் உலக வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து கோடி கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் சீனாவின் பொருளாதாரம் சீரழியும், அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஊழல் அதிகாரிகள் மீது சீனஅரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வெளிநாட்டு பாங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.

No comments: