Saturday, June 18, 2011

வங்கிகளில் ரூ.323.62 கோடி டெபாசிட் ; திருப்பதி கோவிலுக்கு ரூ.11 கோடி வருமானம்.

வங்கிகளில் ரூ.323.62 கோடி டெபாசிட்; திருப்பதி கோவிலுக்கு  ரூ.11 கோடி வருமானம்

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவிலின் உண்டியல் வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. உண்டியல் வருமானத்தை தேவஸ்தான அதிகாரிகள் வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர்.

இதன் மூலம் கோவிலுக்கு வட்டி வருமானம் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு பல்வேறு வங்கிகளில் தேவஸ்தான அதிகாரிகள் ரூ.323.62 கோடி டெபாசிட் செய்தனர். இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வட்டி மூலம் ரூ.10.94 கோடி கோவிலுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

திருப்பதி ரெயில் நிலையத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் லக்கேஜில் முகவரி எழுதும் பிளாஸ்டிக் அட்டை தரப்படுகிறது. பக்தர்கள் அதை லக்கேஜில் இணைத்து முகவரியை எழுதி விடலாம்.

இதன் மூலம் லக்கேஜை யாராவது தவறவிட்டால் போலீசார் அதை உரியவர் களிடம் எளிதாக ஒப்படைக்க முடியும். இந்தியாவிலேயே இந்த முறை முதன் முதலாக திருப்பதி ரெயில் நிலையத்தில் அமல்படுத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: