Monday, June 20, 2011

4 மாணவர்கள் தற்கொலை -ஆசிரியர் கைது : அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்

4 மாணவர்கள் தற்கொலை: அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைவிடுமுறை கூடுதலாக 15 நாட்கள் விடப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து இன்னும் ஒருவார காலம் நிறைவடைவதற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவி, ஒரு மாணவர் என 2 பேரும், சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்ற மாணவர், பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது கல்வி அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. பெற்றோர் மத்தியில் இந்த சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இவர்களில் பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் சாவுக்கு காரணம் ஆசிரியர்கள் தான் எனபதை அறிந்த உறவினர்கள், நேற்று சேலம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் செய்தனர்.

பின்னர், மல்லூர் காவல் நிலையத்தில் சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டது சம்பந்தமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இன்று துறை ரீதியான விசாரணையை துவக்கியுள்ளர்கள்.

இன்று 20-6-2011 திங்களன்று கணக்கு ஆசிரியர் செந்திலை போலீசார் கைது செய்துள்ளனர். எஞ்சியுள்ள நான்கு ஆசிரியர்களும் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.


No comments: