Wednesday, April 13, 2011

நாடு திரும்ப இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு உத்தரவு.


இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 4-வது ஐ.பி.எல்.,போட்டியில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு விளையாட்டுதுறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை அணி வரும் மேமாதம் முதல் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள ஸ்காந்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடன் மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்றது. இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் 4-வது ஐ.பி.எல் . கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் இரண்டு முன்னாள் கேப்டன்களான குமார் சங்ககாரா டெக்கான் சார்ஜஸ் அணியிலும், மகேளா ஜயவர்த்தனே கொச்சி டஸ்கர்ஸ் அணியிலும் விளையாடி வருகின்றனர்.

இவர்கள் மட்டுமல்லாது இலங்கையின் மற்ற வீரர்களும் ஐ.பி.எல்.,போட்டியில் விளையாடி வருகின்றனர். வரும் மே 8-ம் தேதி வரை ஐ.பி.எல்., போட்ட நடைபெற உள்ளது. மேலும் மே மாதம் 11-ம் இலங்கை அணி இங்கிலாந்திற்கு புறப்பட இருப்பதால் இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல்., போட்டியிலிருந்து விலகி விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மகிநாதாநந்தா அல்துகாமகே உத்தரவிட்டுள்ளார்.

உலக கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை நாட்டு பிரதிநிகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

No comments: