Wednesday, April 13, 2011

சேலம் - போலீஸ் தடியடி? அதிமுக பிரமுகர் பலி!

சேலம் அருகே உள்ள சிவதாபுரத்தில் வாக்குச்சாவடி அருகே திமுக அதிமுகவினர் வாக்குச் சேகரித்தனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

ஆனால் அது வாக்குச் சாவடிக்கு 200 மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட இடம் என்பதால் போலீசார் அவர்களைக் கலைந்து போகச் சொல்லியுள்ளனர்.

ஆனால் அவர்கள் மெத்தனமாக இருக்கவே, போலீசார் அவர்களை விரட்டத் தொடங்கியுள்ளனர். இதில் கூட்டத்தில் இருந்த அதிமுக தொண்டர் சின்னசாமி (வயது 52) என்பவர் ஓடும்போது கால் இடறி விழுந்து இறந்ததாகச் சொல்லப் படுகிறது.

ஆனால், போலீசார் அடித்ததால்தான் அவர் இறந்தார் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த சின்னசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


No comments: