Wednesday, March 30, 2011

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு.

திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயகாந்துக்கு எதிராகவும் நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்து வருகிறார்.சென்னையை அடுத்த தாம்பரத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு லூஷூ வந்திருக்கு. அது வந்திட்டு என்ன சொல்லுது. நாடு சரியில்ல...ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு. விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார், நான் நாட்டு மக்களுக்கு விடுதலை வாங்கித்தரப்போறேன்னு சொல்லுது.

என்ன இப்ப வெள்ளைக்காரன் பிரிட்டிஷ் ஆட்சியா நடந்துக்கிட்டிருக்கு. நீ விடுதலை வாங்கித்தர்றதுக்கு.

அந்த லூஸூ முதல்ல என்ன சொல்லுச்சு. நான் மக்களோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. தெயவத்தோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. மக்களும் கலைஞரும் ஒண்ணுதான். அது ரெண்டும் கலைஞர்கிட்ட வந்தாச்சு.

இப்ப நீ எங்க போய் கூட்டணி சேர்ந்திருக்க. சீட்டுக்காக போய் சேர்ந்திருக்க. அது சீட்டுக்காக சேர்ந்த அணி அல்ல. சீட்டிங் அணி. காசு வாங்கிட்டு போய் சேர்ந்திருக்க நீ. பிளடி ஃபூல்.

யார ஏமாத்துற நீ. மொதல்ல என்ன சொன்ன நீ. 30,40 சீட்டுக்கு எல்லாம் எலும்ப பொறுக்குற நாய் நான் இல்லன்னு சொன்னீல்ல. இப்ப 41 எலும்ப வாங்கியிருக்க. அதுக்கு பேரு என்ன? நீதான சொன்ன. 30,40 வாங்குறதுக்கு நான் நாயில்லன்னு.

கூட்டணி ஏன் சேர்ந்தீங்கன்னு பத்திரிக்கைகாரங்க கேட்குறாங்க. அதுக்கு நீ என்ன சொல்லுற. இப்ப கூட்டணி சேரனுங்குறது அவசரம்னு சொல்லுற. என்ன கக்கூஸ் போற அவசரமா?

எம்.ஜி.ஆரின் நிறமும் கிடையாது. குணமும் கிடையாது. அப்புறம் எதுக்கு எம்.ஜி.ஆருன்னு சொல்லிக்கிட்டு திரியற. நீ இந்த மக்களுக்கு என்னத்த புடுங்க போற? என்று விஜயகாந்தை விளாசி எடுத்தார்.

விஜயகாந்த் எப்போதும் நிதானமின்றி இருப்பதால், பிரச்சாரத்தில் என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாது. ஏதோ ஒரு பிரச்சனையை பற்றி எப்போதாவது நிதானமாக அவரால் பேச முடிகிறதா. அவருக்கு பெயர் கேப்டன் என்று சொல்கிறார்கள். தான் என்ன பேசினோம் என்பதை காலையில் பேப்பரில் பார்த்துதான் தெரிந்துகொள்வார்.

எம்ஜிஆருக்கு மாற்றாக விஜயகாந்த்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நேற்று கட்சியை ஆரம்பித்துவிட்டு இன்று முதல் அமைச்சர் பதவிக்கு வர ஆசைப்படலாமா? முதல் அமைச்சராக வர ஆசையாக இருந்தால் ஒரு 5 கோடி, 10 கோடி செலவு செய்து முதல் அமைச்சராக நடிக்க வேண்டியதுதானே.

எம்ஜிஆர் போல நடிக்கணும் என்றால் அவரைப்போல ஒரு கண்ணாடியும், தொப்பியையும் போட்டு படத்துல நடிக்க வேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ரோட்ல வந்து எம்ஜிஆர் மாதிரியே தொப்பியை வாங்கி மாட்டிக்கிட்டு, கண்ணாடிய மாட்டிக்கிட்டு, கையில கர்ச்சிப்பை வச்சிக்கிட்டு அசிங்கமா இல்லையா.

இப்படி பேசியதால் என்னுடைய உருவபொம்யை எரிக்கச் சொல்லி மகிழ்கிறார். ஆனால் விஜயகாந்த்துக்கு எதிரான எனது விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்றார்.

1 comment: