Wednesday, March 30, 2011

சேலம் - நாமக்கல், இடையே இரயில் வெள்ளோட்டம்.

சேலம், நாமக்கல், கரூர் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக சேலம்-கரூர் இரயில் இருந்து வந்தது. இதற்க்காக அகல இரயில் பாதை அமைத்திட 1996-97ஆம் ஆண்டு இரயில்வே துறை அனுமதி வழங்கி பணிகள் நடைபெற்று வந்தது.

சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 53கிலோ மீட்டர் தூரம் ஒரு பிரிவாகவும், நாமக்கல்லில் இருந்து கரூருக்கு 32கிலோ மீட்டர் தூரம் ஒரு பிரிவாகவும், மொத்தம் 85கிலோ மீட்டர் தூரம் புதிய அகல இரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த இரயில் வழித்தடத்தில் குறுக்கிடும் பாதைகள், ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றின் மீது இரயில்வே பாலங்கள் கட்டப்பட்டன.

மேலும் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்தது. சுமார் 700கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவடைந்து, சேலம் - நாமக்கல் இடையே இரயில் முதல் சுற்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக 28-03-2011 அன்று நடைபெற்றது. விரைவில் சேலம்-கரூர் இரயில் பயண்பாட்டிற்கு வரும்.

No comments: