Monday, March 28, 2011

மயிலாப்பூர் தொகுதி வேட்பாளரானார் தங்கபாலு! ஜெயந்தி மனு நிராகரிப்பு

மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலுவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

அந்தத் தொகுதியில் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மயிலாப்பூரின் காங்கிரஸ் வேட்பாளர் தாம் தான் என கே.வி.தங்கபாலு அறிவித்துள்ளார்.

முன்னதாக, மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி போட்டியிடுவதற்கு, காங்கிரஸ்சில் பல்வேறு அணியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயந்தி தங்கபாலு தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் இரண்டு ஆவணங்கள் இணைக்கப்படாததால், அவரது மனு நிராகரிக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளர் தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது.

அதேநேரத்தில், ஜெயந்தியின் வேட்புமனுவில் இணைக்கப்பட்டிருந்த அந்த இரண்டு ஆவணங்கள் மாயமாகிவிட்டது என தங்கபாலு புகார் கூறியுள்ளார்.

No comments: