Monday, March 28, 2011

50 லட்சம் கையூட்டு தா.பா. மீது குற்றச்சாட்டு: இ.கம்யூ கட்சியில் பிளவு.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 ஆயிரம் பேர் அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தளி தொகுதியில் ராமச்சந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்காமல், மாநில செயலாளர் தா.பாண்டியன் மற்றும் மகேந்திரனும் லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு வேட்பாளரை அறிவித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் நாகராஜ் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தளி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் நாகராஜ். இவர் மேலும் கூறுகையில்,

மாநில துணை செயலாளராக இருந்த மகேந்திரன் 50 லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கட்சி நிர்வாகிகளை ஆலோசிக்காமல் தளி தொகுதி வேட்பாளரை அறிவித்துவிட்டார்கள். கட்சியில் 30 வருடமாக தியாகம் செய்தவர்கள் எல்லாம் ஒன்றுகூடி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு செய்துள்ளோம். சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் வேறு கட்சியில் இணைவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தளி தொகுதியில் போட்டியிடும் ராமச்சந்திரன், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்

No comments: