Wednesday, January 4, 2012

பெண் டாக்டரை கொலை செய்த ஆட்டோ டிரைவர் - கொன்றது ஏன்?



தூத்துக்குடியில் இரவு சிகிச்சை அளித்து கொண்டிருந்த பெண் டாக்டர் ஒருவர் வாளால் வெட்டியும், குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் துப்பு துலங்கியது.

கர்ப்பிணி மனைவி இறந்ததால் ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களுடன் வந்து இந்த வெறியாட்டத்தை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாகி விட்ட அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெண் டாக்டரை வெட்டிக் கொலை செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி 3வது மைல் காமராஜர் நகரை சேர்ந்த பேராசிரியர் திருஞானசம்பந்தம் மனைவி சேதுலட்சுமி. இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் தலைமை டாக்டராக பணியாற்றினார். மேலும் தனியாக மருத்துவமனையும் நடத்தி வந்தார். இவரது மகள் பூரணசந்திரிகா அமெரிக்காவில் டாக்டராக உள்ளார். மகன் கோபிநாத் டெல்லியில் ஐஏஎஸ் படித்து வருகிறார்

தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த மகேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நித்யா. 6 மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 30ம் தேதி மதியம் திடீரென்று கை, கால் வீக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டார். உடனே அவரை மகேஷ் டாக்டர் சேதுலட்சுமியிடம் அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் சேதுலட்சுமி நித்யா வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டது. உடனே ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாயின் உயிருக்கு ஆபத்து என்றார். இதற்கு மகேஷ் சம்மதிக்கவே ஆபரேசன் செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். அதன்பிறகு நித்யாவுக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனது மனைவியை வேறு மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்வதாகக் கூறிய அவர் நித்யாவை பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு நித்யா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனால் ஆத்தரிமடைந்த மகேஷ் தனது மனைவி சாவுக்கு டாக்டர் சேதுலட்சுமி தான் காரணம் என்று கருதினார். இதனால், ஆத்திரமடைந்த மகேஷ், டாக்டர் சேதுலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மகேஷை எச்சரித்து அனுப்பினர்.

கடந்த 31ம் தேதி மனைவி உடலை அடக்கம் செய்த பிறகு தனது நண்பர்களை சந்தித்த மகேஷ் அந்த டாக்டரை சும்மா விடக்கூடாது, எனது மனைவி எப்படி துடிதுடித்து இறந்தாளோ அதே போன்று டாக்டரை சாகடிக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார். அவரது நண்பர்கள் குருமுத்து, அப்பாஸ் மற்றும் ராஜாவும் இதற்கு சம்மதித்தனர்.

இதை தொடர்ந்து நேற்றிரவு 10.30 மணி அளவில் மகேஷ் தனது நண்பர்கள் இருவருடன் ஆட்டோவில் டாக்டர் சேதுலட்சுமி மருத்துவமனைக்கு சென்றார். நண்பர்கள் இருவர் வெளியில் நின்று கொள்ள, டாக்டர் சேதுலட்சுமி அறைக்குள் நுழைந்த மகேஷ் நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் சேதுலட்சுமியை அரிவாளால் கொடூரமாக வெட்டினார். இதில் துடிதுடித்து சேதுலட்சுமி இறந்தார். தடுத்த ஊழியர் வள்ளிக்கும் வெட்டு விழுந்தது. அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

தகவல்அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். தனிப்படையினர் நேற்று காலை குருமுத்து, அப்பாஸ் மற்றும் ராஜாவை கைது செய்தனர்.

மேலும் மதுரைக்கு தப்ப முயன்ற மகேஷையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பிரபல ரவுடியான மகேஷ் மீது 2006ல் ஒரு கொலை வழக்கு, 2008ல் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன .என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: