Wednesday, December 21, 2011

தனுராசனம், நாவாயாசனம், பூங்கொடி ஆசனம்.

தனுராசனம்.
தனுராசனம்

செய்முறை:

விரிப்பில் குப்புறபடுத்தநிலையில் இருகைகளையும் உடலோடு ஒட்டி தரையில் வையுங்கள். இரு முழங்கால்களையும் மடக்கி, ஒன்றுமாற்றி ஒன்றாக, பின்புற பாகத்தில் குதிகால் படுமாறு சில தடவை செய்யவும். அதற்கு பிறகு இரு கைகளால் பின்புறமாக அந்தந்த பக்கத்து கணுக்காலை பிடித்து முழங்காலை வெளிப்பக்கமாய் விரித்து தலையையும், நெஞ்சையும் தூக்கவும். இந்த நிலையில் இரு பாதங்களும் சேர்ந்தே இருக்கட்டும். முழங்கால்களை மட்டும் விரியுங்கள். வயிற்றுப்பகுதி, தரையில் இருக்கும் நிலையில், உடம்பு வில் போல அமையவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 வினாடி இருந்து, பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

முதுகு தண்டு வலி குணமாகும். பின்புற ஊளைசதை குறையும். தொந்தி காணாமல் போகும். வயிற்றிலுள்ள சிறுகுடல், பெருங்குடல், கிட்னிகள், மூத்திரப்பை, கைகள் ஆகியவை பின்னோக்கி இழுக்கப்படுவதால், தோளிலிருந்து மார்பு, நுரையீரல், இதயம், உதர விதானம், கல்லீரல், மண்ணீரல் போன்ற மிக முக்கியமான உறுப்புகளுக்கு புதிய ரத்தம் பாய்வதால், அவை நன்கு இயங்கும். நீரிழிவு, மஞ்சள்காமாலை, மலட்டுத் தன்மை, செரிமான கோளாறுகள் அகலும். இது பச்சமோத்தாசனத்துக்கு மாற்று ஆசனமும்கூட!


நாவாயாசனம்.
நாவாயாசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி தலைவைத்து மல்லாந்து படுத்து, இரு கால்களையும் மேலே தூக்கவும். அதற்கு பிறகு தலை, தோள்பட்டையையும் மேலே தூக்கி, உடம்பை பிருஷ்டபாகத்தில் நிறுத்தவேண்டும். இரு உள்ளங்கைகளையும் கீழே வைத்த நிலையில், தோள்பட்டைக்கு இணையாக முழங்காலுக்கு வெளியே நீட்ட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து, மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பவும்.

பயன்கள்:

மல - ஜல பிரச்சினைகள் வராது. உடல் எடை குறையும். பரதநாட்டியம், சங்கீதம், உடற்பயிற்சியை விட, உடலில் பிராணசக்தியை அதிகரிக்கும் ஆற்றல், நாவாயாசனத்துக்கு உண்டு. தவிர, இது தனுராசனத்துக்கு மாற்று ஆசனமும்கூட!


பூங்கொடி ஆசனம்.
பூங்கொடி ஆசனம்

செய்முறை:

இயல்பான சுவாசத்தில், சிரசாசன நிலைக்கு வரவும். வலது காலை லேசாக மடக்கி, இடது காலால் வலதுகாலை மெல்ல சுற்றவும். அடுத்த படியாக இதையே மாற்றி செய்யவேண்டும்.

பயன்கள்:

பாத வலி, மூட்டுப்பிடிப்பு, கால் வீக்கம், காலில் நரம்புகள் புடைத்து சுருக்கிக்கொள்ளுதல் போன்ற நோய்கள் குணமாகும்.

No comments: