Tuesday, December 13, 2011

முல்லைப் பெரியாறு ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் : பிரதமருக்கு அப்துல்கலாம் யோசனை.



முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் யோசனை தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கடிதம் எழுதியுள்ளார்.

இரு மாநில மக்களும் பலனடையும் வகையில், முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு கலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கலாம் எழுதிய கடிதத்தில், கேரள மாநிலத்துக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம்.

நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப் பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும்.

இதன் மூலம், நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின்போது, எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்னையால் இரு மாநில உறவும் பதிக்கப்பட்டுவிடக்கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கலாம் கூறியுள்ளார்.

1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.